காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாரி கண்காணிப்பாளர் சுரேஷ், பணியாளர்களை ஏற்பாடு செய்த வேலு ஆகியோரை கைது செய்து சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் மண் குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.