×

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். சமூக வலைத்தளங்களும் மியான்மரில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நேப்பிதாவ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ சர்வாதிகாரம் தோல்வி அடையட்டும், ஜனநாயகம் வெல்லட்டும் என கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்கள், கையில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

Tags : Myanmar , Thousands protest against military rule in Myanmar
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்