×

சென்னை, சேலம், திருநெல்வேலியில் உள்ள காவல் மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவல் ஆளிநர்கள் மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு, சென்னையில் உள்ள காவல் மருத்துவமனையை, முழுத்திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் நேற்று அறிவித்தேன். தற்போது கோவை, மதுரை, திருச்சி மற்றும் ஆவடி மாநகரங்களில் காவல்துறையினருக்காக மருத்துவமனைகள், உள்நோயாளிகளுக்கான வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னை புனித தோமையர் மலை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளுடன் காவல்துறையினருக்கான பகல் நேர மருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கூறிய மருத்துவமனைகள் மற்றும் மருத்தகங்களை, 36 படுக்கை வசதிகள், சி.டி.ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்களுடனும், முழுமையான மருத்துவ ஆய்வகங்களுடனும், சிறிய சிகிச்சைகளுக்கான அறுவை அரங்குகளுடனும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய முழு நேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறி உள்ளார்.

Tags : Police Hospital ,Chennai ,Salem ,Chief Minister ,announcement ,Tirunelveli , Police Hospital in Chennai, Salem, Tirunelveli will be operational 24 hours a day: Chief Minister's announcement
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்