×

முசிறி அருகே காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (27). வெல்டராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் ராக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் சில தினங்களுக்கு முன் மனைவியின் ஆதார்கார்டு எண் கேட்டு அவரது குடும்பத்தினருக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளை அவரிடமிருந்து மீட்டு தரவேண்டும் என பெற்றோர் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பிரசாத்தின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பிரசாத் திருப்பூர் நகரில் இருப்பது தெரிந்து அங்கு சென்று போலீசார் பிரசாத்தையும், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகன் ஆகியோரை ஜெகநாதபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் எதிர்பாராத தருணத்தில் காவல்நிலையத்தின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். பிரசாத்துக்கு ஏற்கனவே 2012ல் வேறு ஒரு மைனர் பெண்ணுடன் நடைபெற்ற திருமணம் தொடர்பாக நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : suicide ,terrace ,Musiri ,police station , A youth committed suicide by jumping from the terrace of a police station near Musiri
× RELATED முசிறியில் பாரிவேந்தர் வாகனத்தை...