மேற்கு வங்க முதல்வர் மம்தா ‘எனது ஆட்சியில் ஊழலே கிடையாது’ என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தவர், சில தினங்களுக்கு முன் ஊழல் நடத்திருப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார். மம்தா அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ராஜீப் பானர்ஜி சமீபத்தில் பாஜ.வில் இணைந்தார். அவர்தான், வனத்துறைக்கு ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் செய்திருப்பதாக முதல்வராக உள்ள மம்தாவே குற்றம்சாட்டி இருக்கிறார். ராஜீவ் செய்த முறைகேடு பற்றி விசாரித்து, அவரை உள்ளே தள்ளப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். தவளை தனது வாயால் கெடும் என்பார்களே, அது இப்படி தானோ!