×

உத்தமபாளையம் அருகே கணவரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி கைது: கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலை

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே கணவரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியில் கடந்த ஜூன் 14ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கூடலூர் போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் (42) என்பதும், செங்கல் காளவாசல்களில் வேலைபார்த்ததும் தெரிந்தது.

இறந்தவரின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டது. நாகராஜ் மனைவி முத்துமாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. முத்துமாரிக்கும், புதுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். நாகராஜ் செங்கல் காளவாசல் வேலைக்காக அடிக்கடி கோவை சென்றுவிடுவார். இதனால் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். இது முத்துமாரிக்கு பிடிக்கவில்லை.

இதனால் செல்வராஜுடன் அதிகமாக நெருங்கி வாழ தொடங்கி உள்ளார். முத்துமாரியின் மூத்த மகள் திருமணத்திற்கு செல்வராஜ் உதவி உள்ளார். நாகராஜ் மகள் திருமணத்திற்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது முத்துமாரியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்துள்ளது. இதனால் மனைவியை கண்டித்துள்ளார். இது முத்துமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தனது கள்ளகாதலன் செல்வராஜுவிடம் முத்துமாரி கூறி உள்ளார். இதனால் கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். சம்பவ நாளன்று நாகராஜ் போதையில் இருந்துள்ளார். இதில் அதிகமாக மது ஊற்றி கொடுத்து கள்ளாக்காதலுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உத்தமபாளையம் போலீசார் முத்துமாரியை கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலன் செல்வராஜை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவி அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Uththamapalaiyam ,lover , Wife arrested for killing husband and burning petrol near Uththamapalaiyam: Police net for fake lover
× RELATED ஓடிடியில் வெளியாகிறது ‘லவ்வர்‘!