×

தண்டையார்பேட்டையில் நாளை சமத்துவ மக்கள் கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

சென்னை: சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கை: சமத்துவ மக்கள் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள வாணி மஹால் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில், வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம்.

எனவே மாநில, மாவட்ட, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : meeting ,Equality People's Organization Executive Committee, General Committee ,Ernavur Narayanan , Equality People's Organization Executive Committee, General Committee meeting tomorrow at Thandayarpet: Ernavur Narayanan Report
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...