சென்னை: தமிழகத்திற்கு சசிகலா ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த தினகரன், சசிகலா அணியினர் முயற்சிக்கின்றனர் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். மனித வெடிகுண்டுகளாக மாறுவோம் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.