ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிஞ்சகல்புதூரில் மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாமியார் பொன்னம்மாளுக்கும் மருமகன் முருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் விபரீதம் நிகழ்ந்துள்ளது. பொன்னம்மாள் உடலை கைப்பற்றி முருகனை கைது செய்து கீழக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.