ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, இலவசமாக ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போக்குவரத்து காவல் துறை சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடந்தது. இதில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமை தாங்கினார். போக்குவரத்து எஸ்.ஐ. சிட்டிபாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி பைக் பேரணியை தொடக்கி வைத்தார். பின்னர், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினார். இந்த பேரணியில் ஆட்டோக்களும் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றன.