திருவள்ளூர்: செங்குன்றம் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் வராமல் காக்களூர் சிடிஎச் சாலை செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சாலையானது ஆக்கிரமிப்பால் குறுகி உள்ளது.
திருவள்ளூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், செங்குன்றம் நெடுஞ்சாலையில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காக்களூர் சிடிஎச் சாலை வழியாக செல்லும் வகையில் நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளதால் சாலையானது மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த சாலையானது ₹1.50 கோடி மதிப்பில் புதிய சாலையாக அமைக்கப்பட்டது. சாலையோர மின் கம்பங்கள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைத்ததால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி அகலப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.