×

தமிழகத்தில் புதிதாக 489 பேருக்கு கொரோனா: 4 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 489 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 52,656 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 47 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8,40,849 பேருக்கு உறுதியானது.  நேற்று மட்டும் 506 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 8,24,024 பேர் குணமடைந்துள்ளனர். 4,446 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 4 பேர் மரணம் அடைந்தனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,379 ஆக உயர்ந்துள்ளது

Tags : Corona ,newcomers ,deaths ,Tamil Nadu , Corona for 489 newcomers in Tamil Nadu: 4 deaths
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...