செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது; சசிகலா வருகிற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் சசிகலா நிச்சயமாக போட்டியிடுவார். போட்டியிடும் பட்சத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார். மேலும் சசிகலா வாகனத்தில் கட்சி கொடி பயன்படுத்தும் விவகாரத்தில் டிஜிபியிடம் மட்டுமல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. தமிழகத்தில் மீண்டும் உண்மையான அம்மாவின் ஆட்சி அமையும் என்றார்.