×

ஏடிஎம் மிஷினை காரில் கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்

திருமலை: தெலங்கானா மாநிலம், அதிலாபாத்தில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் கயிற்றால் காரில் கட்டி நகருக்கு வெளியே கொண்டு சென்று உடைத்து, அதில் இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை  போலீசார் ஆய்வு செய்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை காரில் கட்டி இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. முதற்கட்ட விசாரணையில், இந்த கொள்ளையில் 4 பேர் கும்பல் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.அவர்கள் வெளி மாநிலங்களை சேர்ந்த கைதேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களை தீவி ரமாக தேடி வருகின்றனர்.

Tags : robber , The robber tied the ATM machine to the car and dragged it away
× RELATED நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது