சென்னை: தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் விரல் நகம், தொலைபேசி உரையாடல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு குறித்த அறிக்கைக்காக வழக்கை ஒத்திவைக்குமாறு காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை பிப்ரவரி 11ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.