×

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் அறிவித்தார். விரும்பத்தகாத நிகழ்வுகளான காவல்துறையினரை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க சில வழக்குகள் போடப்பட்டது. உணர்வுபூர்வமாக போராடிய சிலர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

Tags : Palanisamy ,Jallikattu protest ,announcement , Jallikattu protest, police, case, withdrawal, Chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...