தா.பழூர் :அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது இடங்கண்ணி கிராமம். இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இடம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 2005-2006ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 75 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
அதுபோல 2007-2008ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மனை இல்லா பயனாளிகள் 75 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.ஆனால் தற்பொழுது வரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இந்த இலவச வீட்டு மனை பட்டா பகுதிகளில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்கு சாலை வசதி என்பது இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.