×

அரியலூரில் மாஜி முப்படை ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.21: அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் பிரபுவை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் குடும்பத்தை விட்டு பல்வேறு சூழ்நிலைகளில் பணிபுரியும் ராணுவ வீரனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ராணுவ கேண்டீன் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்கள் சார்ந்த குடும்பத்தினர் என ஏராளமான கலந்து கொண்டனர்….

The post அரியலூரில் மாஜி முப்படை ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ex-Army ,Ariyalur ,Anna statue ,-Trial Army Soldiers ,Dinakaran ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு