×

திருவானைக்காவல் அருகே லோடுவேன் கவிழ்ந்து விபத்து

திருவெறும்பூர், மார்ச் 14: கும்பகோணத்தில் இருந்து முசிறிக்கு தென்னை மரங்களை ஏற்றிச்சென்ற லோடு வேன் திருவானைக்காவல் அருகே உள்ள பனையபுரம் ரங்கம் நாட்டு வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கும்பகோணத்தில் இருந்து லோடு வேன், திருச்சி மாவட்டம் முசிறிக்கு தென்னை மரங்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு திருவானைக்காவல் கல்லணை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது பனையபுரம் அருகே லோடு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ரங்க நாட்டு வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் இல்லை. இந்த சம்பவம் குறித்து நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post திருவானைக்காவல் அருகே லோடுவேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvanaikaval ,Thiruverumpur ,Panaiyapuram ,Kumbakonam ,Musiri ,
× RELATED திருச்சியில் திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்..!!