×

மங்கலம் அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த மூதாட்டி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், மங்கலத்தை அடுத்த 63.வேலம்பாளையம் பகுதியில் இருந்து பூமலூர் செல்லும் வழியில் உள்ள கிளை வாய்க்காலில் மூதாட்டி உடல் கிடப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு வந்து மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தவர் 63. வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி சரஸ்வதி (70). என தெரிவந்தது. சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி வீட்டிலிருந்து வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வாய்க்காலில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

The post மங்கலம் அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Mangalam ,Tirupur ,Tirupur district ,Velampalayam ,Bhumalur ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் மாட்டுச் சாணத்தை கஞ்சா...