கோவை: கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (62). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ருக்குமணி (50). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் எலக்ட்ரீசியன். மகள் இன்ஜினியரிங் படித்து வருகிறார். ருக்குமணியின் தங்கை உமாதேவி (40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். செல்வராஜ் குடும்பத்தினர் உமாதேவியை பாதுகாத்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், உமாதேவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனார். அவரை செல்வராஜ் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கேரளா அரசு வீடற்று சாலையில் சுற்றுபவர்களை மீட்டு அவரது குடும்பத்தாரிடம் சேர்க்கும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காந்திபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் கேரள மாநிலம் கொல்லம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உமாதேவியை மீட்டுள்ளனர். பின்னர், அறக்கட்டளை செயலாளர் புனலூர் சோமராஜன் ஏற்பாட்டின் பேரில் அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், உமாதேவி அவரது உறவினர்களை பற்றி தெரிவித்தார். இதனையடுத்து, கோவை கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். கருமத்தம்பட்டி போலீசாரின் முயற்சியால் உமாதேவியின் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டு அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில், உமாதேவியை அவரது குடும்பத்தாரிடம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், ‘எனது மாமியார் இறப்பதற்கு முன்பு உமாதேவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நாங்கள் பாரமரித்து வருகிறோம். இந்நிலையில், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணமல் போனார். பல்வேறு இடங்களில் தேடி அலைந்தோம். தற்போது கிடைத்துள்ளார். அவர் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி’ என்றார். உமாதேவி தனது குடும்பத்தாரை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய அளவிலான மகளிர் ட்ரேக் கோவை மாணவி சைக்ளிங் …
The post கோவையில் நெகழ்ச்சி சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தார் appeared first on Dinakaran. | கோவையில் நெகழ்ச்சி சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தார் | Dinakaran
×
கோவையில் நெகழ்ச்சி சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தார்
02:30 am Mar 10, 2023 |
Tags : Nekajchi ,Coimbatore ,Selvaraj ,Somanur ,Rukmani ,Rukumani ,Umadevi ,Kerala government ,Gandhi Bhavan Trustees ,Kollam, Kerala ,Punalur Somarajan ,Coimbatore Karumathambatti police ,Karumathambatti police ,Karumathambatti Police Station ,Women's Trek ,