×

சென்னையில் புதைவட மின் கேபிள் அமைக்கும் பணி விரைவில் முடியும்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சென்னை: சென்னையில் புதைவட மின்கேபிள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது விருகம்பாக்கம் ரவி (அதிமுக) பேசும்போது, விருகம்பாக்கம் தொகுதியில் புதைவட மின்கேபிள் அமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவுபெறவில்லை. முக்கியமாக, குறுகலான சாலைகளில் இந்த பணிகள் நடைபெறவில்லை. இதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.இதற்கு பதிலளித்து மின்சார துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது, ”சென்னை முழுவதும் புதைவட மின்கேபிள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் புதைவட மின்கேபிள் அமைக்கும் பணி 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதாக உறுப்பினர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆய்வுசெய்து மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags : Thangamani ,announcement ,Chennai , Laying of buried power cable in Chennai will be completed soon: Minister Thangamani announcement
× RELATED அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன்...