×

விவசாயி படுகொலை வழக்கில் தங்கை மகன் அதிரடி கைது

மரக்காணம், மார்ச் 7: மரக்காணம் அருகே சொத்துக்காக தாய் மாமனை வெட்டி படுகொலை செய்ததாக தங்கை மகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கோட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (70), விவசாயி. இவர் கடந்த 3ம் தேதி மர்ம நபர்களால் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை வெட்டி கொலை செய்தது யார்? என தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட சுந்தரமூர்த்தியின் தங்கை மகன் மதியழகன் (35) என்பவர்தான் இக்கொலையை செய்தது என போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் மதியழகன் சில நாட்களாக தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசார் தனிப்படை அமைத்து மதியழகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதியழகன் தனது தாய்மாமனை கொலை செய்துவிட்டு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து செய்யூர் பகுதியில் பதுங்கியிருந்த மதியழகனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து மரக்காணம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மதியழகன் போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதாவது, என் தாய் மாமா சுந்தரமூர்த்தியிடம் உள்ள சொத்தில் எனக்கும் பாகம் கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் என் மாமன் என் சொத்தில் உனக்கு பாகம் கொடுக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தால் கொடுவாள் கத்தியால் தாய் மாமன் தலையில் வெட்டி கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சொத்துக்காக முதியவர் என்றும் பாராமல் தாய்மாமனை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதாகிய மதியழகன் மீது கடந்த 2 வருடத்துக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக தன் சொந்த 6 மாத கைக்குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post விவசாயி படுகொலை வழக்கில் தங்கை மகன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Dinakaran ,
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்