×

ஆசிரியர்களுக்கு பேச்சு போட்டி

விருத்தாசலம், மார்ச் 7: விருத்தாசலம் வட்டாரம் புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவள்ளி தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியை ஜெசிந்தா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார். பேராசிரியர்கள் முனைவர் குணசேகரன், முனைவர் பஞ்சமுத்து மற்றும் ஆசிரியர் பயிற்சி நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர் சிகரம் தொட சிலேட்டை எடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சண்முகம், வரதராஜ பெருமாள், சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர். வரதராஜ பெருமாள் நன்றி கூறினார்….

The post ஆசிரியர்களுக்கு பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Tags : Vrudhachalam ,Pudukuraippet ,Dinakaran ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...