×

ஐடி பொறியாளர் வீட்டில் 51 சவரன் திருட்டு பீரோவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை வேலூர் ஓட்டேரியில் பரபரப்பு

வேலூர், மார்ச் 14: வேலூர் ஓட்டேரியில் பொறியாளர் வீட்டில் பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 51 சவரன் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி கமலாட்சிபுரத்தை சேர்ந்தவர் தனசேகர்(45). சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனசேகர், வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டிக் கொண்டு இருக்கிறாராம். அந்த பணியை மேற்பார்வை செய்ய குடும்பத்தினருடன் கடந்த கடந்த 10ம் தேதி அங்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 51 சவரன் நகை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மர்ம ஆசாமிகள் திட்டமிட்டு கண்காணித்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post ஐடி பொறியாளர் வீட்டில் 51 சவரன் திருட்டு பீரோவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை வேலூர் ஓட்டேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : 51 ,Sawaran ,Vellore Otteri ,Vellore ,Vellore Ottery ,Sawarans ,
× RELATED புதுவையில் பரபரப்பு ஆசிரியர் பயிற்சி மாணவி தூக்குபோட்டு தற்கொலை