×

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்

சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 161ன் படி 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்து இருந்தது. தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 7 நாட்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.


Tags : Governor ,government ,Tamil Nadu ,Perarivalan , perarivalan
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...