×

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது தொடர்பாக டி.ஜி.பி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி மதுசூதனன் புகார்

சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக சசிகலா மீது டி.ஜி.பி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி மதுசூதனன் புகார் அளித்துள்ளார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா சென்றார். சென்னை திரும்பும் வழியில் பல்வேறு இடங்களில் அதிமுக கொடியை ஏற்ற சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக அதிமுக கொடியை சசிகலா ஏற்றுவதை தடுக்கவும் காவல்துறையிடம் அமைச்சர்கள் கோர திட்டமிட்டுள்ளனர். சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Madhusudhanan ,AIADMK ,office ,DGP ,Sasikala , AIADMK, flag, Sasikala
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...