×

தமிழக மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகிவிட்டனர் : மா.கம்யூ. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விழுப்புரம்:விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஆட்சி முடியும், கடைசி நேரத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் அளவற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராகி விட்டனர். மத்திய பட்ஜெட் தோல்வியடைந்த பட்ஜெட். இந்தியாவை இருளில் அழைத்து செல்லும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர்களுக்கு துரோகம் செய்து வருகிறார்.

தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டு 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். வன்னியர்களுக்கும், இதர சமூகத்தினருக்கும் மோதலை ஏற்படுத்துவது அவரது கோரிக்கையின் நோக்கம். அரசியல் ஆதாயத்திற்காக கையில் எடுத்துள்ள, இவ்விவகாரம் எந்த வகையிலும் நிறைவேறாது என்று அவருக்கும் தெரியும். அவர்களது கட்சிக்காரர்களுக்கும் தெரியும். சசிகலா வெளியே வந்தது தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.



Tags : Tamil Nadu ,Balakrishnan ,Maoist , பாலகிருஷ்ணன்
× RELATED பாமக கால்களை பிடித்து பாஜ கூட்டணி வைத்துள்ளது: பாலகிருஷ்ணன் தாக்கு