×

எதிர்பார்ப்பது கிடைக்காவிடில் எனது தலைமையில் 3வது அணி : சொல்கிறார் சரத்குமார்

பெரம்பூர், : சென்னை மேற்கு மண்டல சமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு, நிருபர்களிடம்  சரத்குமார் கூறியதாவது:நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து அதிமுகவினர் பேசுவார்களா என்று நம்மால் கணிக்க முடியாது. முதலில் பாஜவுடன் கூட்டணியில் எத்தனை சீட் என முடிவெடுத்த பிறகு மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேசுவார்கள் என்று கருதுகிறேன்.வருகிற சட்டமன்ற தேர்தலில் 3வது அணி, 4வது அணி, 5வது அணி என அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கூட்டணியில் எங்களுக்கு 1 சீட், 2 சீட், 3 சீட் என்று ஒதுக்கினால் தேர்தலில் நிற்க மாட்டோம். எங்களுக்கு எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை என்றால் எனது தலைமையில் 3வது அணி அமைவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.



Tags : team ,Sarathkumar , சரத்குமார்
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...