×

ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை : முதல்வர் பழனிசாமி உரை

சென்னை : ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை என்றும் அதே சமயம் எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலை தொடர்பாக அதிமுக அரசு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கோரி ஆளுநரிடம் ஒப்படைத்தது அதிமுக அரசு. ஆனால், ஆளுநர் இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.2011 அதிமுக ஆட்சியில் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7 பேர் விடுதலை குறித்த நடவடிக்கைகளை எடுத்தது முதல்வர் ஜெயலலிதாவும் அவரது அரசும் மட்டும் தான். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பய்ஸ் ஆகியோர் விடுவிக்க வேண்டும் என ஏற்கனவே பேரவையிலும் அமைச்சரவையிலும் தீர்மானத்தை கொண்டு வந்தது அதிமுக தான்.  

அதிமுக அரசை பொறுத்தவரை உண்மையாகவே 7 பேருக்கு விடுதலை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனரை சந்தித்து அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.தற்போது 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் தொடந்து வலியுறுத்தி வருகிறோம். ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை. விரைவில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன,என்றார்.


Tags : Governor ,release ,Palanisamy , முதல்வர் பழனிசாமி
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...