×

உத்திரமேரூர் அருகே பரிதாபம்; கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்..!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே கல் குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாத்தூர் கிராமத்தில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் 40க்கும் மேற்பட்டோர் வேலைப்பார்த்து வந்தனர். இந்தநிலையில் குவாரியின் ஒரு பகுதி திடீரென மளமளவென சரிந்து அங்கு வேலைப்பார்த்து வந்தவர்களின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
.
கற்குவியலுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஜேசிபி மற்றும் 6 லாரிகள் கல்குவாரிக்கு அடியில் சிக்கியுள்ளது. பாறை சரிவில் 20 பேர் சிக்கி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடம் மிகவும் மேடான குறுகிய பகுதியாக இருப்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. சிகிச்சை அளிக்க வசதியாக 20ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன.

Tags : Uttiramerur , Awful near Uttiramerur; 4 killed in stone fall at Kalkuvari: Rescue operations intensify ..!
× RELATED உத்திரமேரூர் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்பு