×

71வது நாளாக டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களை தடுத்து நிறுத்திய போலீஸ்!

டெல்லி : டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற கனிமொழி, திருமா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களை டெல்லி போலீஸ்! தடுத்து நிறுத்தியது.

71வது நாளாக போராட்டம்

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திக்ரி, சிங்கு, காஜிப்பூர்  உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 12 கட்டங்கள் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறையாக மாறியது. இதில் விவசாயி ஒருவர் உயிரிந்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் பொருட்டு டெல்லி போலீஸ் தடுப்பு வேலிகள் அமைத்திருக்கிறது.

காஜிப்பூரில் தமிழக எம்பிக்கள் முழக்கம்

இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி - உ.பி. எல்லையான காஜிப்பூரில் போராடும் விவசாயிகளை சந்திக்க தமிழக எம்பிக்கள் பேருந்தில் சென்றனர்.

*திமுக எம்.பி. கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், ரவிக்குமார், வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் பேருந்தில் சென்றனர். மல்லிகார்ஜுனா கார்கே, அர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களும் பேருந்தில் உடன் சென்றிருந்தனர்.

*ஆனால் விவசாயிகளை சந்திக்க சந்திக்க விடாமல் தமிழக எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

*காஜிப்பூர் போராட்டக் களத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் போடப்பட்டு இருப்பதாலும் அப்பகுதியில் 144 தடை உள்ளதாலும் எம்பிக்களை விவசாயிகளை சந்திக்க டெல்லி காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

*இருப்பினும் விவசாயிகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

*இதனிடையே ஒரு புறம் தமிழக எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் டெல்லி போலீசார் சாலையில் பதித்து வைத்திருந்த ஆணிகளை விவசாயிகள் அகற்றுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

*மறுபுறம் காஜிப்பூரில் தடுக்கப்பட்ட தமிழக எம்பிக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கமீட்டு வருகின்றனர்.விவசாயிகள் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : MPs ,Tamil Nadu ,Thirumavalavan ,Trichy Siva ,Kanimozhi ,Delhi , Kanimozhi, Trichy Siva, Thirumavalavan
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து...