திருச்சி வந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று அளித்த பேட்டி: அமெரிக்காவில் இருந்தபடியே எம்ஜிஆர் ஜெயித்த வரலாறு தமிழகத்தில் இருக்கு. அதனால் கேப்டன் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து மக்களுக்கு நல்லது நடக்கும். அவர் தயாராகி வருகிறார். கொஞ்சம் காலதாமதம் ஆகிறது. இருந்தாலும் உடல் நிலை நல்லா இருக்கு. மிக விரைவில் வருவார். தேமுதிக இந்த செகண்ட் வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. சசிகலா வருகையால் அதிமுகவில் குழப்பம் இருப்பதால் சரியாக இருக்குமா என்றால் காலம் தான் முடிவு செய்யும். சசிகலா பெண்ணாக இருந்து கஷ்டப்படுவதால் அம்மாவும், நாங்களும் ஆதரிக்கிறோம். லீடராக எந்த காலத்திலும் நிரூபிக்கவில்லை ஜெயலலிதா பின்னால் தான் அவர் இருந்தார். தற்போது அவர் லீடராக நிரூபிக்க வேண்டும்.