சென்னை: சமகதலைவர் சரத்குமார் அறிக்கை: முதன்மை துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் சொந்த பணி மற்றும் தொழில் காரணமாக கட்சி பணியில் ஈடுபட இயலாமல் இருப்பதால், அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து இன்று (நேற்று) முதல் விடுவிக்கப்படுகிறார். மேலும், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராதிகா சரத்குமார் முதன்மை துணை பொதுச்செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் புதிய முதன்மை பொதுச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.