×

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமம் திடீர் நகரை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதே கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி பிரசன்னா (16) பிளஸ் 2 படிக்கிறார். பிரசன்னாவுக்கு, கடந்த 8 மாதமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. அதில் அவருக்கு பாடம் சரிவர புரியவில்லை. இதனால், கார்த்திக் ராஜாவிடம் டியுஷன் படிக்க சென்று வந்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக சுமதியிடம் ஆசை வார்த்தை கூறிய கார்த்திக் ராஜா, மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்ராஜாவை கைது செய்தனர்.

Tags : Youth arrested under Pokcho Act
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...