×

அண்ணா நினைவு தினம் அனைத்து கட்சியினர் மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு அனைத்து கட்சியினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் அண்ணா நினைவில்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பென்ஜமின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணா நினைவில்லத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் நகர செயலாளர் மகேஷ், ஏகாம்பரம், அருள், வெங்கடேசன் உள்ளிட்ட பலர், நினைவில்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக நகர செயலாளர் சாட்சி சண்முகசுந்தரம் தலைமையில், நகர துணை செயலாளர் குமார். அவைத்தலைவர் மணிவண்ணன், தொண்டரணி சுப்பிரமணி,கேப்டன் மன்றம் கலைச்செல்வன், இளைஞர் அணி செட்டித்தெரு குமார், ஜெயக்குமார், மாவட்ட நெசவாளர் அணி பூபதி, சேகர் மற்றும் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், தேவதாஸ், லோகநாதன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Anna Memorial Day ,parties , Anna Memorial Day is honored by all parties
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...