×

மங்களூரு அருகே 40 மாணவிகளுக்கு கொரோனா உறுதி: நர்சிங் கல்லூரிக்கு சீல்

மங்களூரு: தென்கனரா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள உல்லால் அப்பக்கா சர்க்கிளில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்களே பெரும்பாலும் இங்கு நர்சிங் படித்து வந்தனர். இந்நிலையில் ெகாரோனா தொற்று காரணமாக நர்சிங் கல்லூரி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊர் சென்றிருந்த நர்சிங் கல்லூரி மாணவிகள் மீண்டும் கல்லூரிக்கு வந்தனர்.

அரசின் கொரோனா விதிகளின் படி நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 மாணவிகளுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து நகரசபை அதிகாரிகளும், மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் கல்லூரியை பார்வையிட்டு சானிடைசரால் சுத்தம் செய்து 19 நாட்களுக்கு கல்லூரியை மூட உத்தரவிட்டனர். இதையடுத்து நர்சிங் கல்லூரி குவாரண்டைன் செய்யப்பட்டது.

Tags : Corona ,Mangalore , Mangalore, Corona, College of Nursing, Seal
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி மங்களூரு –...