×

ஜனாதிபதி வருகையால் சாலைகள் புனரமைக்கும் பணிகள் தீவிரம்

குடகு: இந்திய ராணுவ ஜெனரல் கர்னல் திம்மையாவின் நினைவு இல்ல திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருகையையொட்டி 34 லட்சம் செலவில் சாலைகளை சீரமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. குடகு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ராணுவ தளபதி கர்னல் திம்மையா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இந்த நினைவு இல்லத்தை வரும் 6ம் ேததி சனிக்கிழமை இந்திய ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் திறந்து வைக்கிறார்.

இதையடுத்து ஜனாதிபதியை வரவேற்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. மாவட்டத்தில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை கண்டறிந்து அவற்றை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சீரமைப்பு பணிகளுக்காக 34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Tags : President ,visit , President, Attendance, Road Works, Intensity
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...