கொச்சி: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கர் 98 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். டாலர் கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு கொச்சி சிறையில் சிவசங்கர் அடைக்கப்பட்டிருந்தார். கொச்சியில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் சிவசங்கரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.