மதுரை: மணப்பாறை, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ஜல் ஜீவன் திட்டப்பணிக்கு விதிகளை மீறி ஒப்புதல் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரின் உறவினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு ஒப்புதல் வாங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. திருச்சியை சேர்ந்த சரவணன் என்பவர் மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.