சென்னை: அதிமுக - அமமுக இணைப்பு பற்றி ஓபிஎஸ் - இபிஎஸ் முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவுதினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செயலலிதா நினைவிடத்தில் முடிக்கப்படாமல் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் மக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
அதிமுக - அமமுக இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.