×

சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பாடகர் எஸ்பிபி, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல்

சென்னை : சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கில் கூடியது. 2021ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் உரை வாசிப்புக்கு முன்பே எதிர்க்கட்சிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநர் உரையை முடித்த பின்பு அலுவல் குழு உறுப்பினர்களின் கூடி, பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் நிரல் தொடங்கியது. கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் பாடகர் எஸ்பிபி, முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 22 பேருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Santa ,Durakkannu ,singer ,assembly ,SBP , Durakkannu, Dr. Santa, condolences
× RELATED ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ....