×

நடிகை சித்ரா தற்கொலை நிபுணர் குழு அறிக்கை

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது என சித்ராவை வற்புறுத்தவில்லை.

தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை  பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

Tags : Actress , Actress Chitra, Suicide, Report
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...