×

பெண் இன்ஸ்பெக்டருடன் ஐபிஎஸ் அதிகாரி நெருக்கம்: சென்னை போலீசில் பரபரப்பு

சென்னை: பெண் இன்ஸ்பெக்டருடன் ஐபிஎஸ் அதிகாரி நெருக்கமாக இருப்பதாக அரசல், புரசலாக தகவல்கள் வெளியாகி சென்னை காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளையும், சர்ச்சைகளையும் எப்போதுமே பிரிக்க முடியாது. அதேபோல, காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள்- பெண் போலீசாருடன் தவறான எண்ணத்தில், பின்னர் அவர்களை ஒரு போதை பொருளாக மட்டும் நினைத்து பழகி விட்டு கைவிட்டுச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் உயர் அதிகாரிகள் பேசினால், அவர்களை உண்டு இல்லை என்று செய்கிற பெண் போலீசாரும் அதிகமாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தற்காலிக அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடைய உயர் அதிகாரிகளின் சொல்படி வளைந்து செல்வதால் தங்களுடைய வாழக்கையை இழந்து தவிப்பதும் நடந்து வருகிறது. அதேபோலத்தான் சென்னையில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்.

சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். அவர் எஸ்ஐயாக பணியாற்றியபோது பல அதிகாரிகள் அவரை வலைத்துப்போட பல வகைகளிலும் முயன்று முடியாமல் தோற்றதுதான் கதையாக இருந்தது. ஆனால் சென்னையில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக வந்தவுடன் அதே சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியின் வலையில் எளிதாக விழுந்து விட்டார். ஐபிஎஸ் அதிகாரி சட்டம் ஒழங்கு பணியில் பெண் இன்ஸ்பெக்டரை பார்த்தவுடன் அவரது செல்போன் நம்பரை பிடித்து நைசாக பேச ஆரம்பித்துள்ளார். அடிமேல் அடி அடிச்சா அம்மியும் நகரும் என்பார்கள். அதேபோல, ஐபிஎஸ் அதிகாரி கொஞ்சம் கொஞ்சமாக நைசாக பேசி அழகான பெண் இன்ஸ்பெக்டரை தனது காதல் வலையில் விழ வைத்து விட்டார். பின்னர் இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்தனர்.

ஐபிஎஸ் அதிகாரியே தன் மடியில் விழுந்ததால், தனக்கு மேல் உள்ள அதிகாரிகளை பெண் இன்ஸ்பெக்டர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு தாமதமாக வருவது. மைக்கில் கூட, தாமதமாகவும், தெனாவட்டாகவும் பதில் கூறுவது என்று அவரே தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரிபோலவே நினைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர் சந்திரமுகியாகவே(ஐபிஎஸ்) மாறி உயர் அதிகாரிகளுக்கே ஆர்டர் போட ஆரம்பித்து விட்டார். வேறு வழியில்லாமல் எல்லோரும் பொறுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் ஐபிஎஸ் அதிகாரியுடன் சினிமாவுக்கு செல்வது, மால்களில் சுற்றுவது போன்று சட்டம் ஒழுங்கு பணியை விட்டு விட்டு இருவரும் வேறு பணிகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் அவர்களை யாரும் கேட்க ஆள் இல்லாததால் அவர்கள் காதல் பறவைகளாக ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டனர்.

ஐபிஎஸ் அதிகாரிக்காக முன் கூட்டியே தியேட்டரில் டிக்கெட் வாங்கி காத்திருக்கும் இன்ஸ்பெக்டர், படம் போடும் நேரத்தில் வந்து படம் பார்த்து விட்டு செல்லும் பணி வாரத்தில் ஒரு முறை என்று நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் வெளியில் தெரிந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் ஐபிஎஸ் அதிகாரி வேறு ஒரு சட்டம் ஒழுங்கு பகுதி பணிக்கு மாற்றலாகிவிட்டார். ஆனாலும் சில நாட்கள் தொடர்ந்த இவர்களது காதல், யார் கண் பட்டதோ பட்டுப்போக ஆரம்பித்து விட்டது. பெண் இன்ஸ்பெக்டருடன் பேசுவதை கொஞ்சம், கொஞ்சமாக ஐபிஎஸ் அதிகாரி குறைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் பேசுவதை முழுவதுமாக நிறுத்திக் கொண்டார். புதிய இடத்தில் தன்னைப்போல யாரையாவது ஐபிஎஸ் அதிகாரி தேர்வு செய்து விட்டாரோ என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் அதிகாரியை அவரது அலுவலகம் சென்று பார்க்க முடியாமல் தவியாய் தவித்தார்.

இந்தநிலையில்தான், ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா பாதுகாப்பு பணிக்கு ஐபிஎஸ் அதிகாரி வருவது தெரிந்ததும், அங்கு சென்று பார்க்கலாம் என்று விடுமுறை எடுத்துக் கொண்டு சாதாரண உடையில் சென்றார். ஆனால் அங்கு அவருடன் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் பார்த்து ஏன் இங்கு வந்திருக்கிறாய் என்று கேட்டபோது வேறு வழியில்லாமல் ஐபிஎஸ் அதிகாரி தன்னை கண்டுகொள்வதில்லை. அதோடு, அவர நம்பி என் புருஷனையும் வீட்டை விட்டு வெரட்டிட்டேன். அத்தோடு விட்டேனா..., என் உடம்புல அவரு மட்டுமே பார்க்கற இடத்துல அவர் பேர பச்சை வேற குத்திக்கிட்டேன்.

கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரை என் கூடவே உன்னை வச்சுக்குறேன்னு சொன்னாரு... அவரும், நானும் ட்ரெஸ் இல்லாம ஒண்ணா இருக்கும் போட்டோ, வீடியோ அவர் செல்போன்லயும் இருக்குது... என் செல்போன்லயும் இருக்குது...என்னை விட்டுட்டு போக அவருக்கு எப்படி மனசு வந்துச்சுன்னே தெரில என்று கூறியபடி கண்ணை கசக்கியிருக்கிறார். இனிமேயும் என்னை கைகழுவ நினைச்சா என்கிட்ட இருக்குற ஆதாரத்தை ஹையர் அபிஷியல்ஸ்கிட்ட கொடுத்து நியாயம் கேட்பேன் என்றாராம். ஆனால் அங்கிருந்தவர்களோ, ‘பிரச்னை பண்ண வந்திருக்கியா..? நீ இங்கு நிக்குறது நல்லாயில்ல’ என்று கூறி அவரை அனுப்பி வைத்து விட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் ஐபிஎஸ் அதிகாரியின் காதல் லீலை வெளியில் தெரிய ஆரம்பித்தது. தற்போது சென்னை முழுவதும் இதுதான் போலீசாரின் ஹாட் டாப்பிக்காக உள்ளதாம்.

* பெண் இன்ஸ்பெக்டர் சபதம்
ஐபிஎஸ் அதிகாரி தன்னை புறக்கணிக்க காரணம் என்ன என்று பெண் இன்ஸ்பெக்டர் விசாரிக்க ஆரம்பித்தாராம். அப்போதுதான், ஐபிஎஸ் அதிகாரி தன்னுடன் பழகும் நேரத்தில், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகளை கூறி, பழகி வந்தாராம். தனது நண்பர் மூலம்தான் ஆந்திர பெண் பழக்கமானாராம். இருவருமே அந்த பெண்ணை ஏமாற்றி விட்டார்களாம். கடைசிவரை வாய்ப்பு வாங்கித் தரவே இல்லையாம். இதனால் தனது கற்பை இழந்த அந்த பெண், ஆந்திராவுக்கே பேக்கப் ஆகிவிட்டாராம். இந்த தகவல் தற்போதுதான் பெண் இன்ஸ்பெக்டருக்கே தெரிய வந்ததாம். மேலும் ஐபிஎஸ் அதிகாரி குறித்து தீர விசாரிக்க சபதம் போட்டுள்ளாராம்.

Tags : officer ,IPS ,inspector ,Chennai , IPS officer's intimacy with female inspector: Sensation in Chennai police
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...