சென்னை: மயிலாப் பூரில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளது. நேற்று அதிகாலை அப்பகுதி மக்கள் நடைபயிற்சி செய்தபோது, ஏடிஎம் மெஷினை 2 நபர்கள் ஆயுதங்களால் உடைத்துக் கொண்டிருந்தனர். இதைபார்த்து திருடன் திருடன் என சத்தம் போட்டனர். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், கைரேகை நிபுணர்களுடன் ஏடிஎம் மையத்திற்கு வந்து கொள்ளைர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில் 2 வடமாநில கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. கொள்ளையர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களை தேடி வருகின்றனர்.