×

புதுச்சேரி, வில்லியனூரில் செல்போனில் ‘பயர் வால்’ கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவன் சாவு

வில்லியனூர்: புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த மணவெளி, அன்னை தெரசா நகர், தண்டுக்கரை வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (46). பால் வியாபாரி. இவரது 2-வது மகன் தர்ஷன் (16). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் செல்போனில் ‘பயர்வால்’ கேம் விளையாடியுள்ளார். இதற்காக, காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு அதிகளவில் சவுண்ட் வைத்து விளையாடியுள்ளார்.

அப்போது, துப்பாக்கி சுடும்போதெல்லாம் தர்ஷன் பயங்கரமாக கத்தியதாக கூறப்படுகிறது. இந்த விளையாட்டு உற்சாகத்தில் தர்ஷன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்ஷனின் பெற்றோர் உடனே அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தர்ஷனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லியனூர்  போலீசார், வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : student ,game ,Villianur ,Pondicherry , Puducherry, plus 2 student, death
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...