×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சுற்றுலாத்துறை சார்பில் 300 டிக்கெட் வினியோகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாநில சுற்றுலாத்துறை சார்பில் 300 தரிசன டிக்கெட் நேற்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.
திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக நாடு முழுவதும் இருந்து சுற்றுலாத்துறை சார்பில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு 300 சிறப்பு தரிசன டிக்கெட் கடந்த 8 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இந்த சேவையில் நாளொன்றுக்கு 2,250 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறைக்கு 1,000 டிக்கெட்டுகள், தெலங்கானா மாநில சுற்றுலாத்துறைக்கு 350 டிக்கெட்டுகள், தமிழக சுற்றுலாத்துறை மற்றும் ஏர் இந்தியா துறைகளுக்கு 250 டிக்கெட்டுகள், கர்நாடக மாநில சுற்றுலாத்துறைக்கு 200 டிக்கெட்டுகள், ஐடிடிசி மற்றும் கோவா மாநில சுற்றுலாத்துறைக்கு 200 டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக பெற்று கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Tirupati Ezhumalayana , Tirupati, Tourism, 300 tickets, distribution
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி...