×

மருத்துவமனையில் இருந்து இளவரசி டிஸ்சார்ஜ்: விடுதலையானதும் சசிகலாவுடன் தமிழகம் வர முடிவு

பெங்களூரு: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டத்தையடுத்து, வரும் 5ம் தேதி அவர் விடுதலையாகவுள்ளார். இதையடுத்து சசிகலா இருக்கும் தேவனஹள்ளி ரிசாட்டிற்கு செல்லும், அவர் 7ம் தேதி காலை சென்னைக்கு செல்ல உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையானார். இருப்பினும் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது தேவனஹள்ளியில் உள்ள தனியார் சொகுசு ரிசார்ட்டில் தங்கியுள்ளார். உறவினரான இளவரசி சிறையில் இருந்து வந்த பின்னர், அவருடன் சேர்ந்து சென்னை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போலீசார் அவரை, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்து சென்றனர். 5ம் தேதி அவர் விடுதலையானதும், நேராக தேவனஹள்ளியில் சசிகலா தங்கியிருக்கும் ரிசாட்டிற்கு செல்கிறார்.

அங்கு 2 நாட்கள் தங்கிவிட்டு, பிப்.7ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்கு வாகன மூலமாக தமிழகம் செல்ல இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஒசகோட்டை, அத்திபள்ளி வழியாக ஓசூர் செல்லும் பாதையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதே நேரம் சுதாகரன் விடுதலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவரை அழைத்து செல்ல யார் வருகிறார்கள் என்பது கேள்வியாகியுள்ளது.

Tags : Princess ,hospital ,release ,Tamil Nadu ,Sasikala , Princess, Discharge, Tamil Nadu
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்