ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் ஆவடி கல்வி மாவட்ட அலுவலர் கற்பகம், திருவள்ளூர் கல்வி மாவட்ட அலுவலர்(பொறுப்பு) சாந்தி, ஊத்துக்கோட்டை தாசில்தார் குமார், போலீஸ் டிஎஸ்பி சாரதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஷேக்தாவுத், ஏழுமலை, பெரம்பூர் ரஜினி லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் சுதாகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 6.50 லட்சம் மற்றும் பெண்கள் பள்ளிக்கு 5 லட்சம் மேலும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் திறந்து வைத்து, 1002 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.