×

ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி கைது

ஜெய்பூர்: ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய ஐபிஎஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் செயல்படும் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஐபிஎஸ் அதிகாரி மணீஷ் அகர்வால் சார்பில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீரஜ் மீனா லஞ்சம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவர்கள் தவிர அரசு அதிகாரிகள் இருவரும் கைதாகி உள்ளனர். 2010ம் ஆண்டு பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரியான அகர்வால் இதற்கு முன்பு ஜெய்பூரில் மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் எஸ்பி.யாக பணியாற்றினார்.

Tags : officer ,IPS ,Rajasthan , Rajasthan, bribery, IPS officer, arrested
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...